வேலூர் அருகே ஆம்புலன்ஸ் வாகனத்தை மதுபோதையில் இயக்கிய ஓட்டுநர் : தப்பியோடிய ஓட்டுநருக்கு போலீசார் வலைவீச்சு
Nov 21 2023 5:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேலூர் அருகே மதுபோதையில் ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்கிய ஓட்டுநரால் பரபரப்பு ஏற்பட்டது. குடியாத்தத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நோயாளியை மேல் சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததை கண்ட நோயாளியின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஓட்டுநரை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவர் தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.