நெல்லை அருகே முன்விரோதம் காரணமாக இளைஞருக்கு அரிவாள் வெட்டு : 4 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
Nov 21 2023 5:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரை அரிவாளால் வெட்டிய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை டவுன்வயல் தெருவை சேர்ந்த சக்தி என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தனது குழந்தையை பள்ளியில் இறக்கிவிட்டு, மவுண்ட் சாலையில் உள்ள தனக்கு சொந்தமான இடத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், கண்ணிமைக்கும் நேரத்தில் சக்தியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். தகவலறிந்து சென்ற போலீசார், சக்தியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.