'தலைமை ஆசிரியர்களை பதவி இறக்கம் செய்யும் நடவடிக்கையை கைவிடவும்' : தமிழக அரசை கண்டித்து தலைமை ஆசிரியர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம்
Nov 21 2023 6:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆயிரத்து 300 உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களை பதவி இறக்கம் செய்யும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அன்பரசன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் கொட்டும் மழையிலும் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை அந்த சங்கத்தின் மாநில தலைவர் அன்பரசன், 45 ஆண்டுகளாக பள்ளிக்கல்வித்துறை நடைமுறையில் உள்ள பதவி உயர்வு அடிப்படையில்தான், பதவி உயர்வு பெற்று தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறோம் என்று தெரிவித்தார். ஆனால், இதற்கு எதிராக தற்போது, தமிழக அரசு பதவி இறக்கம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது என்றார்.