விருதுநகர் அருகே சாலையை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது : விவசாயி சாலையில் படுத்து உருண்டதால் பரபரப்பு
Nov 21 2023 7:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சாலையை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்தனர். ராஜபாளையம் - மதுரை சாலையில் உள்ள நேரு சிலையில் இருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனை சீரமைக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருந்தது. இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றபோது, விவசாயி ஒருவர் சாலையில் படுத்து உருண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.