தேனி அருகே தரமற்ற சிமெண்ட், மணலை பயன்படுத்தி கட்டப்படும் தடுப்பணை : ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பணிகள் தடுத்து நிறுத்தம்
Nov 21 2023 7:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே தரமற்ற முறையில் கட்டப்பட்ட தடுப்பணைப் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். சின்னமனூர் அருகே உள்ள டி. புதுக்கோட்டை கிராமத்தில் தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு தரமற்ற சிமெண்ட் மற்றும் மணலை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பணியின்போதே பாலம் ஆங்காங்கே இடிந்து விழுந்து பலவீனமடைவதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொதுமக்கள் தடுப்பணைப் பணியை தடுத்து நிறுத்தினர். மேலும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தரமான தடுப்பணை கட்ட வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.