நெல் மட்டுமே பிரதானமாக சாகுபடி செய்யப்படும் டெல்டா பகுதியில் மலைப்பிரதேச காய்கறிகளை விளைவித்து விவசாயி சாதனை
Jan 25 2017 9:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி பகுதியை சேர்ந்த சேகர் என்ற விவசாயி, மலைப்பிரதேச பகுதிகளுக்குச் சென்று, அங்கு காய்கறி சாகுபடி முறையை அறிந்துகொண்டு, தனது நிலத்தில் மலைப்பகுதி காய்கறிகளை விளைவித்துள்ளார். மிகக்குறைந்த அளவு தண்ணீர் மற்றும் இயற்கை உரங்களைக் கொண்டு, உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடிய முட்டை கோஸ், சிவப்பு முள்ளங்கி, நூல்கோல், பீட்ரூட், கேரட், காலிபிளவர், டர்னிப், பீன்ஸ் போன்ற காய்கறிகளை விளைவித்து சாதனை படைத்துள்ளார். இந்த மலைப்பிரதேச காய்கறிகள், இயற்கை பேரிடர்களை எதிர்கொள்வதுடன், குறைந்த தண்ணீரில் விளையும் என்பதால், புன்செய் நிலங்களில் இவ்வகை பயிர்களை பயிரிட்டால் அதிக லாபம் கிடைக்கும் என கூறுகிறார். மலைக்காய்கறிகளுடன் கீரை வகைகளையும் விற்பனை செய்வதால், பல்வேறு மாவட்டங்களில் இருந்து கும்பகோணம் வரும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.