வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் சேவைக் கட்டணம் நியாயமானதாக உள்ளதா என்பதை ரிசர்வ் வங்கி கண்காணிக்கும் : ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ஆர். காந்தி பேட்டி
Mar 25 2017 6:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் சேவைக் கட்டணம் நியாயமானதாக உள்ளதா என்பதை ரிசர்வ் வங்கி கண்காணிக்கும் என்று ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் திரு. ஆர். காந்தி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் திரு. ஆர். காந்தி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் கட்டணம் நியாயமானதாக இருக்க வேண்டும் என்றும், இதனை ரிசர்வ் வங்கி கண்காணிக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் மக்களின் தேவைக்கு ஏற்ப புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படும் என்று தெரிவித்த அவர், உலக அளவில் ஏற்றுமதி வர்த்தகத்தில் இந்தியா 16வது இடத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.