ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, 1,600-க்கும் மேற்பட்ட தேர்தல் அலுவலர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம்
Mar 25 2017 7:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட தேர்தல் அலுவலர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் 12-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலின்போது 256 வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் தேர்தல் அலுவலர்கள் ஆயிரத்து 638 பேருக்கு, தண்டையார்பேட்டை சென்னை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. 42 அறைகளில் தனித்தனியே எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு, வாக்குப்பதிவின்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகள் விளக்கிக் கூறினர். ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அலுவலர் திரு.பிரவீண் நாயர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.