டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்ட மன்றத் தொகுதி இடைத் தேர்தலில், கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா ஒப்புதலோடு, தேர்தல் பணிக்குழு கூடுதல் பொறுப்பாளர்களாக 29 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபடும் தோழமைக் கட்சிகளுடன் தொடர்புகொண்டு, தேர்தல் பணிகளை நெறிப்படுத்தும் குழுவில் கூடுதலாக 2 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் அம்மா, தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்கு, வரும் 12-ம் தேதி நடைபெற உள்ள இடைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிக்குழு கூடுதல் பொறுப்பாளர்களாக, முன்னாள் மத்திய அமைச்சர் திரு. கடம்பூர் ஜனார்த்தனம், முன்னாள் வாரியத் தலைவர் திரு. ஆர். முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் திரு. எம்.ஆனந்தன், திருமதி செல்வி ராமஜெயம், திருமதி வளர்மதி ஜெபராஜ், பேராசிரியர் க. பொன்னுசாமி, திருமதி கோமதி சீனிவாசன், திரு. T. இன்பத்தமிழன், முன்னாள் வாரியத் தலைவர்கள் திரு. எஸ்.கலைச்செல்வன், திரு. சிந்து ரவிச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆர்.பி. ஆதித்தன் -
விழுப்புரம் தெற்கு மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் க. காமராஜ் எம்.பி.,
காஞ்சிபுரம் மத்திய மாவட்ட கழக அவைத் தலைவர் திரு. கே.என்.ராமச்சந்திரன், எம்.பி.,
திருவள்ளூர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்றச் செயலாளர் திரு. திருத்தணி கோ. அரி, எம்.பி.,
விழுப்புரம் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் திரு. செஞ்சி சேவல் வெ.ஏழுமலை, எம்.பி.,
திருப்பனந்தாள் ஒன்றியக் கழகச் செயலாளர் திரு.ஆர்.கே.பாரதிமோகன் எம்.பி.,
பெரம்பலூர் மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் திரு. மா.சந்திரகாசி, எம்.பி.,
விருதுநகர் மாவட்டக் கழக துணைச் செயலாளர் திரு.T.ராதாகிருஷ்ணன், எம்.பி.,
கோவை மாநகர் மாவட்ட கழக அவைத் தலைவர் திரு. A.P. நாகராஜன் எம்.பி.,
ஈரோடு மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் திரு. எஸ். செல்வகுமார சின்னையன், எம்.பி.,
தஞ்சாவூர் தெற்குமாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் திரு.கு.பரசுராமன் எம்.பி.,
சேலம் மாநகர் மாவட்ட கழக அவைத் தலைவர் திரு.வி. பன்னீர்செல்வம், எம்.பி.,
திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழக இணைச் செயலாளர் திருமதி வசந்தி முருகேசன், எம்.பி., -
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் திருமதி மரகதம் குமரவேல், -
திண்டுக்கல் மாவட்டக் கழகப் பொருளாளர் திரு.எம்.உதயகுமார், எம்.பி., -
திருப்பூர் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் திரு. சி.மகேந்திரன் எம்.பி., -
நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் டாக்டர் சி. கோபாலகிருஷ்ணன், -
கழக மாநிலங்களவை உறுப்பினர்கள் திரு.எஸ்.முத்துக்கருப்பன், திரு.என்.கோகுலகிருஷ்ணன்,
ஆகியோர் நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், தேர்தல்பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, சிறப்பான முறையில் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அ.இ.அ.தி.மு.க. அம்மா, தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. அம்மா கட்சியின் வேட்பாளரும் கழகத் துணைப் பொதுச் செயலாளருமான திரு. TTV தினகரனை ஆதரித்து, தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபடவுள்ள, தோழமைக் கட்சிகளுடன் தொடர்பு கொண்டு, பணிகளை நெறிப்படுத்தும் குழுவில் கூடுதலாக, கழக சிறுபான்மையினர் நலப்பிரிவுச் செயலாளர் திரு. அ. அன்வர் ராஜா எம்.பி., கழக இலக்கிய அணி இணைச்செயலாளர் டாக்டர் வைகைச் செல்வன் ஆகியோர் நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புகள், கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா ஒப்புதலோடு வெளியிடப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.