ஏப்ரல் 1-ம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ள இன்சூரன்ஸ் கட்டணத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும், பழைய வாகன தடை சட்டத்தை வாபஸ் பெறக் கோரியும் வருகிற 30-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் : தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு
Mar 26 2017 12:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஏப்ரல் 1-ம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ள இன்சூரன்ஸ் கட்டணத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும், பழைய வாகன தடை சட்டத்தை வாபஸ் பெறக் கோரியும் வருகிற 30-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தென் மாநில லாரி உரிமையாளர்களின் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. இதில் புதுச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய தென் மாநிலங்களைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் திரு. சண்முகப்பா, ஏப்ரல் 1-ம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ள இன்சூரன்ஸ் கட்டணத்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தினார். பழைய வாகனங்களை தடை செய்யும் சட்டத்தை வாபஸ் பெற வேண்டுமென்றும், முதலீட்டுடன் சேர்த்து லாபம் பெற்ற பின்பும் செயல்படும் சுங்கச்சாவடிகளை மத்திய அரசு உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதுபோன்று தங்களது பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 30-ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் திரு. சண்முகப்பா தெரிவித்தார்.