தென் பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்ற டிராக்டர்களை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்
Mar 26 2017 1:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென் பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் உரிய அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்ற டிராக்டர்களை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தென் பெண்ணை ஆற்றங்கரை பகுதிகளில், உரிய அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவேரிபட்டிணம் அருகே மணல் ஏற்றி வந்த டிராக்டர்களை நிறுத்தி சோதனை செய்ததில், தென் பெண்ணை ஆற்றங்கரை பகுதியிலிருந்து அனுமதியின்றி மணல் எடுத்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மணலுடன் டிராடர்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.