நாகையில் பரதநாட்டியம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் உணவுத் திருவிழா : பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்பு
Mar 26 2017 1:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகையில் கரகாட்டம், கோலாட்டம், பரதநாட்டியம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய உணவுத் திருவிழாவில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று பயனடைந்தனர்.
மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா வழியில் செயல்படும் தமிழக அரசு சார்பில், ஆண்டுதோறும் பாரம்பரிய உணவுத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாகையில் உணவுத் திருவிழா தொடங்கியுள்ளது. கம்பு, கேழ்வரகு, சோளம், திணை, சாமை, எள், குதிரைவாலி உள்ளிட்டவை கொண்டுசெய்யப்பட்ட உணவு வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும், சிறுதானியங்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் குறித்த கருத்தரங்கமும் நடைபெற்றன. இதில் திரளான இளைஞர்கள், கல்லூரி மாணாக்கர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். முன்னதாக குச்சிபுடி, கரகாட்டம், கோலாட்டம், பரதநாட்டியம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.