பொள்ளாச்சியில் குதிரை வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குதிரை வண்டி பந்தயம்
Mar 26 2017 5:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே, குதிரை வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.
அழிந்து வரும் குதிரை இனங்களை பாதுகாக்க வலியுறுத்தியும், குதிரையினங்கள் வளர்ப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள சோமந்துரை சித்தூர் கிராமத்தில் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியிலும் இருந்து சுமார் 150-க்கும் மேற்பட்ட குதிரைகள் கலந்து கொண்டன. குதிரைகளின் உயரம் மற்றும் வயதுக்கேற்ப தரம் பிரிக்கப்பட்டு 400 மீட்டர் தூரத்திற்கு இந்த பந்தயம் நடத்தப்பட்டது. குதிரைகள் பாய்ந்து ஓடியதை பார்வையாளர்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக்கோப்பைகள் வழங்கப்பட்டன.