ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் - கழக தேர்தல் பணிக்குழு கூடுதல் பொறுப்பாளர்களாக 18 பேர் நியமனம்
Mar 26 2017 6:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிக்குழு கூடுதல் பொறுப்பாளர்களாக மேலும் 18 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக, அ.இ.அ.தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்கு, அடுத்த மாதம் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, அ.இ.அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு கூடுதல் பொறுப்பாளர்களாக, மேலும் 18 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா ஒப்புதலுடன், அ.இ.அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ளது.
முன்னாள் மத்திய இணையமைச்சர் திரு. செஞ்சி ந. ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் திரு. நல்லுசாமி, முன்னாள் அமைச்சர் திரு. M.C. தாமோதரன், கழக அம்மா பேரவை முன்னாள் செயலாளர் திரு. ஆ. இளவரசன், கழக மாணவரணி முன்னாள் செயலாளர் திரு. S. சரவணபெருமாள், கழக விவசாயப் பிரிவு முன்னாள் செயலாளர் திரு.K.K. சிவசாமி, கழக விவசாயப் பிரிவு முன்னாள் செயலாளர் திரு. சோழன் சித. பழனிச்சாமி, அண்ணா தொழிற்சங்கப்பேரவை முன்னாள் செயலாளர் திரு. எஸ். முத்துமணி, அண்ணா தொழிற்சங்கப் பேரவை முன்னாள் செயலாளர் திரு. யு.ஆர். கிருஷ்ணன், மகாராஷ்டிரா மாநில கழகச் செயலாளர் திரு. கே.எஸ். சோமசுந்தரம், முன்னாள் வாரியத் தலைவர் திரு. இரா விநாயகமூர்த்தி, முன்னாள் வாரியத் தலைவர் திரு. D. தாமோதரன், சேலம் மாநகராட்சி முன்னாள் மேயர் திரு. எஸ். சவுண்டப்பன், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளரும், வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயருமான திருமதி. பி. கார்த்தியாயினி, திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயர் திருமதி. எம்.எஸ்.ஆர். ஜெயா, திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் மேயர் திருமதி புவனேஸ்வரி, தஞ்சாவூர் மாநகராட்சி முன்னாள் மேயர் திருமதி சாவித்திரி கோபால், திரு. மைக்கேல் ராயப்பன் ஆகியோர் தேர்தல் பணிக்குழு கூடுதல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு நல்கி சிறப்பான முறையில் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என்று தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.