நெல்லையில் மின்னல் தாக்கி பலியான குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் 4 லட்சம் ரூபாய்க்கான நிவாரண உதவி
Mar 26 2017 6:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை அருகே, மின்னல் தாக்கி பலியான குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் 4 லட்சம் ரூபாய்க்கான நிவாரண உதவி வழங்கப்பட்டது.
நெல்லை மாவட்டம், தென்காசி வீரகேரளம்புதூர் அருகே சீவலசமுத்திரத்தைச் சேர்ந்த அந்தோணிசாமி என்பவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்னல் தாக்கி உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்த அந்தோணிசாமியின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு 4 லட்சம் ரூபாய் நிவாரண உதவி அறிவித்தது. இதனைத்தொடர்ந்து தென்காசி சட்டமன்ற உறுப்பினர் நேரடியாக சென்று, அரசு சார்பில், அந்தோணிசாமி குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.