நீட் தேர்வுக்கு தாமதமாக விண்ணப்பித்தவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் : சி.பி.எஸ்.இ. இயக்குநருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Apr 27 2017 1:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீட் தேர்வுக்கு தாமதமாக விண்ணப்பித்தவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என சி.பி.எஸ்.இ. இயக்குநருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்காக எழுதப்படும் நீட் எனப்படும் இத்தேர்வு அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா, இத்தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். மாண்புமிகு அம்மாவின் வழியில் தமிழக அரசும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், தொழில் நுட்ப கோளாறு காரணமாக நீட் தேர்வுக்கு விண்ணப்பங்களை அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, இத்தேர்வை நடத்தும் சி.பி.எஸ்.இ. எனப்படும் நடுவண் இடைநிலை கல்வி வாரியம் தாமதமாக விண்ணப்பங்கள் அனுப்பும் மாணவர்களை நீட் தேர்வு எழுத அனுமதி மறுத்தது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நீட் தேர்வுக்கு தாமதமாக விண்ணப்பித்தவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என சி.பி.எஸ்.இ. இயக்குநருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்வு எழுத அனுமதிக்காவிட்டால், சி.பி.எஸ்.இ. இயக்குநர் நேரில் ஆஜராக நேரிடும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00