மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா மேற்கொண்ட முயற்சி காரணமாக கூட்டுறவுத்துறை கடந்த ஆறு ஆண்டுகளில் கணினிமயமாக்கப்பட்டு சிறப்பான சேவையாற்றி வருவதாக அமைச்சர் தகவல்
Apr 27 2017 2:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா மேற்கொண்ட முயற்சி காரணமாக கூட்டுறவுத்துறை கடந்த ஆறு ஆண்டுகளில் கணினிமயமாக்கப்பட்டு சிறப்பான சேவையாற்றி வருவதாக அமைச்சர் திரு. செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
கூட்டுறவுத்துறையின் இணைப்பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர்களில் கலந்தாய்வுக் கூட்டம் சென்னை சேத்துப்பட்டில் அத்துறை அமைச்சர் திரு. செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் திரு. செல்லூர் ராஜு, ரூபோ அட்டைகளை விவசாயிகள் இந்தியா முழுவதிலும் உள்ள எ.டி.எம் மையங்களில் பயன்படுத்தி பணம் பெற்று கொள்ளலாம் என தெரிவித்தார். தமிழகத்தில் கூட்டுறவுத்துறையை முழுமையாக கணினிமயமாக்க மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா முயற்சி மேற்கொண்டதாக தெரிவித்த அமைச்சர், இதன்மூலம் கடந்த ஆறு ஆண்டுகளில் கூட்டுறவுத்துறை கணினி மயமாக்கப்பட்டு சிறந்த சேவையை மக்களுக்கு அளித்து வருவதாகவும் கூறினார்.