விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே தேசிய பறவையான மயில்கள் மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவத்தால் பரபரப்பு
Apr 27 2017 4:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே, தேசிய பறவையான மயில்கள், மர்மமான முறையில் இறந்துகிடந்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சுழியை அடுத்துள்ள நரிக்குடி பகுதியில் 10 மைல்கள் இறந்துகிடந்ததைக் கண்டு பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதனைத்தொடர்ந்து, வருவாய்த்துறை மற்றும் வனத்துறையினர் அப்பகுதிக்குச் சென்று, இறந்துகிடந்த மயில்களை பார்வையிட்டனர். மயில்களின் உடல்களும் பரிசோதிக்கப்பட்டன. இந்த மயில்கள், உணவு கிடைக்காமல் இறந்தனவா? அல்லது, வேறு பறவைகளுக்காக விரிக்கப்பட்ட வலையில் சிக்கி இறந்தனவா என வனத்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.