கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாங்கூழ் தயாரிப்பு நிறுவனத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் தயாரிக்கப்பட்டது கண்டுபிடிப்பு - 3 பேர் கைது
Apr 27 2017 4:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாங்கூழ் தயாரிப்பு நிறுவனத்தில் போலீசார் நடத்திய சோதனையில், தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக, 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.
காவேரிபட்டினத்தை அடுத்த பெருமாள்கொட்டாய் பகுதியில், மாங்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு, தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த தகவலின்பேரில், காவேரிப்பட்டினம் போலீசார், தொழிற்சாலையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, குட்கா பொருட்கள் தயாரிக்கப்பட்டு, ஆந்திர மாநிலத்திற்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து, ஆந்திராவைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். தப்பியோடிய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். இந்த சோதனையில், புகையிலை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள், 160 புகையிலை மூட்டைகள், மினி லாரி உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.