திருவள்ளுர் மாவட்டத்தில் குடியிருப்பு பகுதியில் வழிதவறி நுழைந்த புள்ளி மான் தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
Apr 27 2017 8:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவள்ளுர் மாவட்டம், திருவொற்றியூரை அடுத்த சடையங்குப்பம் குடியிருப்பு பகுதியில் வழிதவறி நுழைந்த புள்ளி மான் தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருவள்ளுர் மாவட்டம், திருவொற்றியூரை அடுத்த மணலி - சடையங்குப்பம் குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை புள்ளி மான் ஒன்று வழித்தவறி பாலு என்பவரின் வீட்டிற்குள் நுழைந்தது. பதற்றத்தில் அங்கும் இங்கும் தாவிக் குதித்த மானை பிடிக்க முடியாத அவர், அறையை மூடி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தங்காடு போலீசார், மானை பத்திரமாக மீட்க தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தீயணைப்பு துறையினர் அறையில் இருந்த மானை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.