சித்திரை திருவிழாவை முன்னிட்டு சிவகங்கையில் உற்சாகமாக நடைபெற்ற மஞ்சுவிரட்டு - சீறிப்பாய்ந்த காளைகளை ஆர்வமுடன் ஏறுதழுவிய மாடுபிடி வீரர்கள்
Apr 27 2017 8:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிவகங்கையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு உற்சாகமாக நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கத்தில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகளை பிடிக்க பதிவுபெற்ற 50-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களத்தில் இருந்தனர். சீறிப்பாய்ந்த களைகளை பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இப்போட்டியைக் காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிலிருந்தும் வந்திருந்த திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.