கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீதான குற்றச்சாட்டில் அரசியல் சதி - பொய்யாக புனையப்பட்ட வழக்கை துணிச்சலாக எதிர்கொண்டு டிடிவி தினகரன் வெற்றிபெறுவார் என கழக நிர்வாகிகள் உறுதி
Apr 28 2017 2:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன், தன்மீது புனையப்பட்ட பொய் வழக்கை சந்தித்து குற்றமற்றவர் என நிரூபிப்பார் என்று கழக நிர்வாகிகள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.
திரு. டிடிவி தினகரன் மீதான குற்றச்சாட்டில் அரசியல் சதித் திட்டம் இருப்பதாகவும், பொய்யாக புனையப்பட்ட வழக்கை அவர் துணிச்சலாக எதிர்கொண்டு வெற்றிபெறுவார் என்றும் திரு. நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
திரு. டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 87 சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக, கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் திரு. நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.