தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிமாநில மதுபானங்கள் பறிமுதல் : ஒருவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை
Apr 28 2017 11:46AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிமாநில மதுபானங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக ஒருவரை கைது செய்த காவல்துறையினர், தலைமறைவான மூன்று பேரை தேடி வருகின்றனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் வைக்கோல் ஏற்றி வந்த மினி சரக்கு வேனை மடக்கி, காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 111 பெட்டிகளில் 5 ஆயிரத்து 400 வெளிமாநில மதுபாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதனையடுத்து வேன் ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்ட போது, காரைக்காலில் இருந்து அவை கடத்தியது தெரிய வந்தது. பின்னர் ஓட்டுனரை கைது செய்த காவல்துறையினர், இதில் தொடர்புடைய மேலும் மூன்று பேரை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள மதுபானங்களின் மதிப்பு சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.