கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூ சந்தையில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் பூக்கள் விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி
Apr 28 2017 11:49AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் பூ உற்பத்திக்கும், விற்பனைக்கு பெயர் போன கன்னியாகுமரி மாவட்டத்தில், இந்த ஆண்டு பருவ மழை பொய்ததன், காரணத்தால் விவசாயம் வெகுவாக பாதிக்கப்பட்டது. ஆனால் சென்பகராமன்புதூர், கன்னன்புதூர், ஆரல்வாய்மொழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் பூக்களை உற்பத்தி செய்து வருகின்றனர். கிரேந்தி, சம்பங்கி, கோழிப்பூ, வாடாமல்லி உள்ளிட்ட பூக்களின் உற்பத்தி அமோகமாக நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பூக்கள், தோவாளை பூ சந்தை மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.