62 வயதில் பட்டப்படிப்பு படிக்க துவங்கி இதுவரை நான்கு முதுகலை பட்டம் பெற்றுள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த முதியவர்
Apr 28 2017 12:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
62 வயதில் பட்டப்படிப்பு படிக்க துவங்கி இதுவரை நான்கு முதுகலை பட்டம் பெற்றுள்ள முதியவர் ஒருவர், தற்போது 5-வது முதுகலை பட்டம் பெறவும் தயாராகி இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்தவர் திரு. கணேசன். 72 வயதாகும் அந்த முதியவர், தனது ஓய்வு காலத்தை பயனுள்ளதாக கழிக்க நினைத்துள்ளார். இதனையடுத்து தனது 62-வது வயதில் அஞ்சல் வழிக் கல்வி மூலம், பட்டப்படிப்பினை துவங்கினார். இதுவரை நான்கு முதுகலை பட்டம் பெற்ற அவர், தற்போது 5 முதுகலை பட்டப்படிப்பு எழுதவும் தயாராகி வருகிறார். கல்வி மேல் உள்ள தாக்கத்தினை தன்னோடு நிறுத்திக் கொள்ளாமல், ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வி கற்று தருகிறார். 72 வயதில் அவர் ஆற்றி வரும் இந்த கல்வி சாதனை, அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.