வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Apr 28 2017 3:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை வெப்பம் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய சூறைக்காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக, கரூர் பரமத்தியில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. தஞ்சை, திருச்சி, திருத்தணி, வேலூர், மதுரையில் தலா 41 டிகிரியும், பாளையங்கோட்டை 40 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாகியுள்ளது.
மழை அளவைப் பொருத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை ஆய்க்குடியில் 3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகத்தில் 2 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.