விவசாயிகள் பிரச்சனையில் நாடகமாடும் தி.மு.க. - பா.ஜ.க. தலைவர்கள் குற்றச்சாட்டு
Apr 28 2017 6:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெடுஞ்சாலை மைல் கல்களில் இந்தி எழுத்துக்களை கொண்டுவர கையெப்பம் இட்டவர் தி.மு.க.வைச் சேர்ந்த T.R.பாலு என குற்றம் சாட்டியுள்ள பா.ஜ.க., தமிழக நலன் குறித்த விவகாரங்களில் தி.மு.க. இரட்டை வேடம் போடுவதாக குற்றம் சாட்டினார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் திரு.பொன். ராதாகிருஷ்ணன், தமிழகத்தை தி.மு.க. மோசமான நிலைக்கு தள்ளியுள்ளதாக தெரிவித்தார்.
உழலில் இருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்ற காவிரி பிரச்னையில் துரோகம் இழைத்தது கருணாநிதி என்றும், காவிரி டெல்டா விவசாயிகளுக்கு தி.மு.க. துரோகம் இழைத்து விட்டு இன்று விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பதைப் போல் வேடமிட்டு வருகின்றனர் என்றும் பாரதிய ஜனதா தேசிய செயலாளர் ஹெச். ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.