கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை சம்பவம் தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு : 4 பேர் கைது - எஞ்சிய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தகவல்
Apr 30 2017 10:18AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை சம்பவம் தொடர்பாக, 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், எஞ்சிய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும், நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. முரளி ரம்பா தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை சம்பவம் தொடர்பாக, உதகையில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. முரளி ரம்பா, இச்சம்பவம் தொடர்பாக 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சந்தோஷ், தீபு, உதயகுமார், சத்தீசன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறினார். தலைமறைவாக உள்ள இதர குற்றவாளிகளை, தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருவதாகவும், அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் திரு. முரளி ரம்பா தெரிவித்தார்.