மாண்புமிகு அம்மாவின் கருத்துக்களை மனதில் நிறுத்தி கடினமாக உழைத்தால் நாடும், வீடும் வளம்பெறும் - மே தினத்தை யொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொழிலாளர்களுக்கு வாழ்த்து
Apr 30 2017 12:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உழைப்பு என்னும் மரத்தின் வேர்கள் கசப்பாக இருந்தாலும் அதன் கனிகள் இனிப்பானவை என்பதை உணர்ந்து, சோம்பலை நீக்கி, கடினமாக உழைத்தால் வாழ்வில் உயர்வு பெறலாம்' என்ற மாண்புமிகு அம்மாவின் கருத்துக்களை மனதில் நிறுத்தி கடினமாக உழைத்தால் நாடும், வீடும் வளம்பெறும் என மே தினத்தை யொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொழிலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில், உலகெங்கும் வாழும் உழைக்கும் மக்களின் உன்னத திருநாளாம் மே தின நன்னாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் தனது இதயம் கனிந்த "மே தின" நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
உழைக்கும் மக்களின் மகத்துவத்தை உலகிற்கு பறைசாற்றுகின்ற இந்த மே தினத் திருநாளில், 'உழைப்பு என்னும் மரத்தின் வேர்கள் கசப்பாக இருந்தாலும் அதன் கனிகள் இனிப்பானவை என்பதை உணர்ந்து, சோம்பலை நீக்கி, கடினமாக உழைத்தால் வாழ்வில் உயர்வு பெறலாம்' என்ற மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மாவின் வாக்கை மனதில் நிறுத்தி அனைவரும் நம்பிக்கையோடு உழைத்தால் நாடும் வீடும் வளம் பெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தேசத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைக்கும் தொழிலாளர் பெருமக்களின் வாழ்வில் நலமும், வளமும் பெருகட்டும் என வாழ்த்தி "மே தின" நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்வதாக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.