அ.இ.அ.தி.மு.க குறித்து மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தவறான கருத்துகளை கூறி வருவதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு
Apr 30 2017 3:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அ.இ.அ.தி.மு.க குறித்து மத்திய அமைச்சர் திரு. பொன் ராதாகிருஷ்ணன் தவறான கருத்துகளை கூறி வருவதாக அமைச்சர் திரு. திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க முயலும் மு.க.ஸ்டாலினின் கனவு பலிக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர், இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், இரட்டை இலை சின்னத்தை மீட்பது உறுதி என்றும் கூறினார்.