புதுக்கோட்டை மாவட்டத்தில் வெப்பம் அதிகரித்து வருவதால், குளிர் பானம், பழச்சாறு, இளநீர் போன்ற பொருட்கள் அமோக விற்பனையாவதாக வியாபாரிகள் மகிழ்ச்சி
Apr 30 2017 5:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. அனல் காற்று வீசுவதால், பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியே வராமல் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெப்பத்தைக் குறைக்கும் வகையில் குளிர் பானங்கள், தர்பூசணி, இளநீர், நுங்கு, கரும்புச்சாறு, மோர் போன்றவற்றை பொதுமக்கள் நாடிச் செல்கின்றனர். புதுக்கோட்டை நகரில் டி.வி.எஸ். கார்னர், பூங்கா நகர் உள்ளிட்ட பகுதிகளில் குளிர் பானங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றன. இதனால், வியாபாரிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.