12 அடி நீள 'டை', 44 அடி நீள ரப்பர் தொடர் சங்கிலி, மிகப்பெரிய கடித உறையை தயாரித்து ராமநாதபுரம் மாணவர்கள் சாதனை
May 23 2017 1:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
12 அடி நீள 'டை', 44 அடி நீள ரப்பர் தொடர் சங்கிலி, மிகப்பெரிய கடித உறை ஆகியவற்றை தயாரித்து இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கல்லூரியில் படித்து வரும் ரோகினா என்ற மாணவி, ஆண்கள் கழுத்துப்பட்டையில் அணியும் 'டை" யை 12 அடி நீளத்திற்கு தயாரித்து தயாரித்து சாதனை படைத்தார். 4 மணி நேரத்திற்குள் படைக்கப்பட்ட இந்த சாதனையை இந்திய சாதனை புத்தக நிறுவனத்துக்கு அனுப்பி வைத்தார். இவரது சாதனையை ஏற்ற அந்நிறுவனம் பதக்கமும், சான்றிதழும் வழங்கி கவுரவித்துள்ளது.
மண்டபம் காந்திநகரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வரும் லோகேஸ்வரன் என்ற மாணவன் ஒரு மணி நேரத்தில் 44 அடி நீளமுள்ள ரப்பர் தொடர் சங்கிலியை தயாரித்து சாதனை படைத்தான். இச்சிறுவனின் சாதனையையும், இந்திய சாதனை புத்தகம் அங்கீகரித்து பதக்கமும், சான்றிதழும் வழங்கி கவுரவித்துள்ளது.
இதேபோல், இந்தியாவின் மிகப்பெரிய கடித உறையை தயாரித்து பொட்டகவயலைச் சேர்ந்த ரம்யா என்ற கல்லூரி மாணவி சாதனை படைத்துள்ளார். இவரது சாதனையும் இந்திய சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. சாதனையாளர்கள் 3 பேரையும் ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் திரு. நடராஜன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.