லாரியை கை ஆள்காட்டி விரலில் கயிறு மூலம் கட்டி 100 மீட்டர் தூரம் வரை இழுத்து கோவில்பட்டியை சேர்ந்த நபர் சாதனை
Jun 3 2017 10:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இரத்த தானம் மற்றும் யோகா குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவில்பட்டியை சேர்ந்த நபர் ஒருவர் கை விரல் மூலம் லாரியை இழுத்து சாதனை புரிந்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் திரு. சுரேஷ்குமார். யோகா ஆசிரியரான இவர், இரத்த தானம் மற்றும் யோகா குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 11 டன் எடை கொண்ட லாரி ஒன்றை தனது வலது கை ஆள்காட்டி விரலில் கயிறு மூலம் கட்டி 100 மீட்டர் தூரம் வரை இழுத்து சாதனை புரிந்தார்.