உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, 2 ஆயிரம் மாணாக்கர்கள் வரைந்த பிரம்மாண்ட ஓவியம் - கை அச்சுகளால் வண்ணம் தீட்டி உலக சாதனை
Jun 16 2017 9:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலத்தில், உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கை அச்சால், தொடர்ந்து மூன்றரை மணி நேரம் ஓவியம் வரைந்து உலக சாதனை படைத்துள்ளனர்.
மக்கள் தொகை பெருக்கம் மற்றும் வாகன பெருக்கத்தினால் ஏற்படும் மாசு, மரங்களை வெட்டுவதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து மாணவ-மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்ற பிரம்மாண்ட ஓவியம் தீட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரம் மீட்டர் நீளமும், 110 செ.மீ அகலமும் கொண்ட வெள்ளைத் துணியில் ஆறு விதமான வண்ணங்களை பயன்படுத்தி, தங்கள் கை அச்சுக்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஓவியங்களை வரைந்து, பார்வையார்களை அசத்தினர்.