மதுரையில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடக்க விழா - முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமியிடம் விழா அழைப்பிதழ் வழங்கல்
Jun 26 2017 10:22AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையில் வரும் 30ம் தேதி நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு தொடக்க விழாவுக்கான அழைப்பிதழை, முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமியிடம் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் வழங்கினர்.
முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் இன்று, மதுரையில் நடைபெறவுள்ள பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடக்க விழாவுக்கான அழைப்பிதழை, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வழங்கி, விழாவினை தலைமையேற்று சிறப்பிக்க வேண்டுமென அழைப்பு விடுத்தனர். இதனிடையே, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மதுரை எம்.ஜி.ஆர். விளையாட்டு திடலில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் திரு.வீரராகவ ராவ் தொடங்கி வைத்தார். நீச்சல், கூடைப்பந்து, கைப்பந்து, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.