தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கும் சட்டமுன்வடிவு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது
Jun 24 2017 5:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வகை செய்யும் சட்டமுன்வடிவை தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் திரு. S.P. வேலுமணி இன்று தாக்கல் செய்தார். தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்துப் பேசிய அமைச்சர், உள்ளாட்சித் தேர்தலை எதிர்த்து நீதிமன்றத்துக்கு சென்றதே தி.மு.க.தான் என்று கூறினார். பின்னர் இந்த சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது.