தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின்கீழ் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 85 சதவீதம் உள் ஒதுக்கீடு - கிராமப்புற மாணவர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வசதியாக அரசாணை வெளியீடு - வரும் 27-ம் தேதி முதல் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு
Jun 26 2017 10:40AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின்கீழ் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 85 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால், மருத்துவ படிப்பு சேர்க்கையில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பயன் ஏற்படும் என்றும், சட்டப்பேரவையில் இன்று அறிவிக்கப்பட்டது. மருத்துவ படிப்பில் சேர வரும் 27ம் தேதி மருத்துவ விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், அடுத்த மாதம் 17ம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.