கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு : குறுவை பருவ நெல் சாகுபடிக்கு விவசாயிகள் மும்முரம்
Jun 24 2017 4:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்படவுள்ளதால், குறுவை பருவ நெல் சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகிவருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் கெலவரப்பள்ளி அணை, K.R.P.அணை மற்றும் பாரூர் பெரிய ஏரி ஆகிய நீர்நிலைகளிலிருந்து முதல்போக நெல் சாகுபடிக்கு தேவையான தண்ணீர் இருப்பு உள்ளது. இன்னும் சில தினங்களில் இந்த அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளதால், விவசாயிகள் குறுவை பருவ நெல் சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர். காவேரிப்பட்டினம், மலையாண்டஹள்ளி, கால்வேஹள்ளி, திம்மாபுரம், தளிப்பட்டி என பல்வேறு இடங்களில் விவசாயிகள் குறைந்த செலவில் அதிக மகசூல் தரக்கூடிய இயந்திர நடவு மூலம் விதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்பணிகளை காவேரிப்பட்டினம் வேளாண்மை உதவி இயக்குநர்கள் ஆய்வு செய்து, இயந்திர நடவு முறை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். காவேரிப்பட்டினம் வட்டாரத்தில் மட்டும் 375 ஹெக்டேரில் இயந்திர நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, விதைநெல் தூவும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இயந்திரம் மூலம் நடவு செய்வதால் கூடுதல் மகசூல் கிடைப்பதாகவும், தமிழக அரசு ஏக்கருக்கு 2 ஆயிரம் ரூபாய் மானியம் கொடுப்பதால், இதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.