புதுக்கோட்டை மாவட்டத்தில் முந்திரி அமோக விளைச்சல் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி
Jun 24 2017 4:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை, கந்தர்வக் கோட்டை, அரிமளம், கறம்பக்குடி, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் முந்திரி தரம் பிரிக்கப்பட்டு கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நடப்பாண்டு முந்திரி அதிக விளைச்சல் கண்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.