மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள் - விதைப்பந்துகளை தயாரித்து மலைப்பகுதிகளில் வீச திட்டம்
Jun 26 2017 12:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டத்தில், மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில், பள்ளி மாணவர்கள் தயாரித்த விதைப்பந்துகளை மலைப்பகுதிகளில் வீச திட்டமிடப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் மரம் வளர்ப்புத் திட்டம் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் தன்னார்வ அமைப்புகள் மூலமும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலமாகவும் விதைப் பந்துகள் தயாரிக்கப்பட்டு, மலைப்பகுதிகள், வனப்பகுதிகள் மற்றும் நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகளில் போடப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பள்ளி, மாணவ - மாணவிகள் ஒன்று சேர்ந்து விதைப்பந்துகளை தயாரித்துள்ளனர். வேம்பு, புங்கை, பூவரசு போன்ற பல்வேறு மரங்களின் விதைகளைக் கொண்டு, சுமார் 3 ஆயிரம் விதைப்பந்துகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை வல்லநாடு, குருமலை பகுதிகளிலும், தாமிரபரணி ஆற்றின் கரையோரத்திலும் தூவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.