கோடை விடுமுறை முடிவுக்கு வந்த பிறகும், தொடர் விடுமுறையால் ஊட்டியில் மீண்டும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு : சுற்றுலாப் பயணிகள் விடுமுறையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்

Jun 26 2017 12:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோடை விடுமுறை முடிவுக்கு வந்த பிறகும், தொடர் விடுமுறையால் ஊட்டியில் மீண்டும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அங்குள்ள பூங்காக்களிலும், பள்ளத்தாக்கு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கில் திரண்ட சுற்றுலாப் பயணிகள், விடுமுறையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களில் ஊட்டி குறிப்பிடத்தக்கதாகும். நீலகிரி மாவட்டத்திற்கு அழகு சேர்க்கும் இந்த மலைப்பிரதேசம் கோடை விடுமுறையின்போது, சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. தற்போது கோடை விடுமுறை முடிவுக்கு வந்துள்ள போதிலும், கடந்த 3 நாட்களாக அரசு விடுமுறை என்பதால், தற்போது ஊட்டி மீண்டும் களைகட்டியுள்ளது. நேற்று முன்தினம் காலையில் இருந்தே இங்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தாவரவியல் பூங்காவில் தொடங்கி, படகு குழாம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா என அனைத்து சுற்றுலாத் தலங்களிலும், சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால், பசுமை படர்ந்து காணப்படுவதால், அதனை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசிக்கின்றனர்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை காரணமாக, ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் வர்த்தகமும் களைகட்டியுள்ளது. இதனால் வியாபாரிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00