சர்வதேச போதைப் பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் எதிர்ப்பு நாளை முன்னிட்டு சென்னையில் விழிப்புணர்வு பேரணி
Jun 26 2017 1:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சர்வதேச போதைப் பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் எதிர்ப்பு நாளை முன்னிட்டு, சென்னையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சென்னை கோயம்பேட்டில், சர்வதேச போதைப் பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் எதிர்ப்பு நாளை முன்னிட்டு சென்னைபெருநகர காவல்துறை மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து, விழிப்புணர்வு பேரணி நடத்தின. இந்த பேரணியை, சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் திரு. அ.கா.விஸ்வநாதன், தலைமையேற்று தொடங்கி வைத்தார். போதை பொருட்களால் பாதிக்கப்படும் மாணவ சமுதாயத்தை மீட்க வேண்டியும், போதைக்கு அடிமையாவதை தடுக்கும் பொருட்டும் நடைபெற்ற இந்த பேரணியில், கோயம்பேடு காவல்நிலைய சிறார் மன்றம் மற்றும் அரும்பாக்கம் காவல்நிலைய சிறார் மன்றம் சார்பாக சுமார் 300 மாணவர்கள் கலந்துகொண்டனர். மாணவர்களுடன், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களும் பேரணியில் பங்கேற்றனர்.