நாகை மாவட்டத்தில், 7 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட பருத்தி அறுவடைப் பணிகள் தீவிரம் : மத்திய அரசு நெல்லைப் போலவே பருத்திக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை
Jun 26 2017 1:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டத்தில், 7 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட பருத்தி அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மத்திய அரசு நெல்லைப் போலவே பருத்திக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் மாற்றுப் பயிராக இந்த ஆண்டு 7 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டது. குறைந்த அளவு நிலத்தடி நீரைப் பயன்படுத்தி, தரங்கம்பாடி, மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி ஆகிய தாலுகாக்களில் கடந்த மார்ச் மாதம் சாகுபடி செய்யப்பட்ட பருத்தி, தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. ஏக்கருக்கு 15 குவிண்டால் வரை பருத்தி கிடைக்கும் நிலையில், குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக 4 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. மகசூல் அதிகரித்துள்ள போதிலும், நெல்லைப் போன்றே பருத்திக்கும் மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.