இக்கட்டான சூழலில் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றியவர் கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா : பெரம்பூர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் பேட்டி
Jun 26 2017 2:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இக்கட்டான சூழலில் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றியவர் கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா என பெரம்பூர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் திரு. வெற்றிவேல் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளருக்கு பிரதமர் மோடி, சின்னம்மாவிடம் ஆதரவு கேட்டதாகவும், அதன்பின்னரே, கழக ஆதரவை சின்னம்மா தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை அடையாறில், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை இன்று நேரில் சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திரு. வெற்றிவேல் எம்.எல்.ஏ., சின்னம்மா மற்றும் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் ஆகியோரின் வழிகாட்டுதல்படியே அனைவரும் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.