நூறாண்டுகள் பழமை வாய்ந்த பாம்பன் ரயில் பாலத்தை யுனெஸ்கோவின் பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டி சுற்றுலாப் பயணிகள் வேண்டுகோள்
Jun 26 2017 7:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நூறாண்டுகள் பழமை வாய்ந்ததும், இந்தியாவில் கடல்மீது அமைக்கப்பட்ட நீண்ட பாலமுமான பாம்பன் ரயில் பாலத்தை, யுனெஸ்கோவின் பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டி, சுற்றுலாப் பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உலகின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் போற்றும் விதமாக அமைந்துள்ள நினைவுச் சின்னங்கள் மற்றும் கட்டடங்களை, ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு, யுனெஸ்கோவின் பாரம்பரிய நினைவுச்சின்னமாக அங்கீகரித்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவிலேயே கடல் மீது அமைந்த, நூற்றாண்டு பழமைவாய்ந்த மிக நீளமான பாம்பன் ரயில் பாலத்தை, World Heritage Site என்ற யுனெஸ்கோ அமைப்பின் அங்கீகாரத்தை பெற ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவ்வாறு பாம்பன் ரயில் பாலம், யுனெஸ்கோவின் பாரம்பரிய நினைவுச்சின்ன பட்டியலில் சேர்க்கப்பட்டால், உலக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.