மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால், குற்றாலத்தில் நீர் வரத்து அதிகரிப்பு - குளிக்கத் தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
Jun 26 2017 7:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால், குற்றாலத்தில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதேபோல், நெல்லை மாவட்டம் தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை ஆகிய பகுதிகளிலும் இடிமின்னலுடன் இன்று மழை பெய்தது. மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால், குற்றாலத்தில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், சீசன் மீண்டும் களை கட்டியுள்ளது. இதனால், கடந்த இரண்டு நாட்களாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் தொடர் கனமழையால் ஐந்தருவியில் கொட்டும் நீரின் அளவு வெகுவாக அதிகரித்துள்ளது.
அருவியின் நிலை அபாயகரத்தை எட்டியுள்ளதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க காவல் துறை தடை விதித்துள்ளது. இதனால் விடுமுறை மற்றும் ரமலான் பண்டிகையை கொண்டாட குற்றாலம் வந்துள்ள சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.