தூத்துக்குடியைச்சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் 60 ஆயிரம் பேருந்து பயணச்சீட்டுகளை சேகரித்து சாதனை
Aug 16 2017 8:27AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியைச்சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் 60 ஆயிரம் பேருந்து பயணச்சீட்டுகளை சேகரித்து சாதனை படைத்துள்ளார்.
தூத்துக்குடி போல்பேட்டையைச்சேர்ந்த மணி என்ற மாணவி, பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் சேகரிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். இந்நிலையில், பேருந்து பயணச் சீட்டுக்களை சேகரிக்கும் முயற்சியில் அவர் இறங்கினார். இதுவரை வெளிநாட்டு பயணச் சீட்டு உட்பட 60 ஆயிரம் பயணச் சீட்டுக்களை சேகரித்துள்ளார். தமிழ்நாட்டில் ஈரோட்டைச் செர்ந்த சண்முகபிரகாஷ் என்பவர் 34 ஆயிரம் பயணச் சீட்டுக்களை சேகரித்ததே சாதனையாக இருந்து வந்தநிலையில், அதனை மணி முறியடித்துள்ளார். இந்திய அளவில் 76 ஆயிரம் பயணச்சீட்டுகளும், உலக அளவில் செக்குடியரசைச் சேர்ந்த ஒருவர் 2 லட்சம் பயணச் சீட்டுக்களும் சேகரித்தது சாதனையாக இருந்து வருகிறது. இந்நிலையில், மாணவி மணி இந்திய அளவிலான சாதனையை முறியடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்.