மயிலாடுதுறையில் தனியார் வங்கி ஏ.டி.எம்.-இல் கொள்ளை முயற்சி நடைபெற்ற சம்பவத்தால் பரபரப்பு
Aug 18 2017 5:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் தனியார் வங்கி ஏ.டி.எம்.-இல் கொள்ளை முயற்சி நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், சேந்தங்குடி - சீர்காழி மெயின்ரோட்டில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். ஒன்று அமைந்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இயங்காமல் இருந்த இந்த ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் நிரப்புவதற்காக 5 அலுவலர்கள் வேனில் சென்றனர். ஏ.டி.எம். மையத்திற்கு அலுவலர்கள் வந்து பார்த்த போது, இயந்திரம் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடைபெற்றிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்த கொள்ளையர்கள் சி.சி.டி.வி. கேமராவை உடைத்து விட்டு பின்னர் கற்கள் மற்றும் கம்பிகளைக் கொண்டு ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்துள்ளனர். ஆனால் பணத்தை எடுக்க முடியாததால் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர். தகவலறிந்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.