'ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்' என்று அழைக்கப்படும் காவல்துறையின் நண்பன் என்ற அமைப்பின் வெள்ளி விழா
Aug 18 2017 9:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
'ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்' என்று அழைக்கப்படும் காவல்துறையின் நண்பன் என்ற அமைப்பின் வெள்ளி விழா மதுராந்தகத்தில் இன்று நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் காவல்துறை இணை இயக்குநர் பிரதீப் பிலீப் பங்கேற்று 25வது ஆண்டு வெள்ளி விழா மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். இதனைத்தொடர்ந்து ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கும், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் Friends of Police அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.