காஞ்சிபுரத்தில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணியில் மாணவ - மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு
Aug 19 2017 7:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தாம்பரத்தை அடுத்த பீர்க்கங்கரணையில் நடைபெற்ற இந்தப் பேரணியில், டெங்கு நோய் தடுப்பு முறை, கொசு ஒழிப்பு, சுற்றுப்புறத் தூய்மை, மரம் வளர்ப்பு, மழைநீர் சேகரிப்பு உள்ளிட்டைவைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ராமநாதபுரத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்றது. பாடல்கள், தெரு நாடகம், கிராமிய நடன நிகழ்ச்சிகள் போன்றவைகள் மூலம் பொதுமக்களிடம் அதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதனிடையே, தூத்துக்குடியில் வருங்கால வைப்பு நிதி குறித்து தொழிலாளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மூவர்ண யாத்திரை நடைபெற்றது. அப்போது வளர்ச்சி, சமூக நல்லிணக்கம், ஒற்றுமை ஆகியவை வலியுறுத்தப்பட்டன.